Friday, March 4, 2011

எல்லோருக்கும் உண்டு எல்லை..



நாட்டின் எல்லை
கோட்டில் முடிகிறது.

மனிதனின்
எல்லை அவன்
வீட்டோடு
முடிகிறது.

எல்லைகள்
இல்லாதவன் இருப்பானாயின்
அவன் இருப்பிடம்
இல்லாதவனாகவே
இருப்பான்.

இல்லங்கள்
பெருக பெருக
இல்லாதவனின் எல்லையும்
குறைகிறது.

இறைவா..
நித்தமும் தவம்
செய்து வேண்டுவேன்
உன்னை

"இல்லங்கள் இல்லா
 உலகம் வேண்டும்.
உலகமே
ஒரே இல்லமாய்
மாறிடல்  வேண்டும்..."