Thursday, December 23, 2010

ஆன்மிகம்

ஆயிரம் வழிகள் உண்டு
ஆண்டவன்
தரிசனத்திற்கு.


அனைத்து வழிகளும்
மூடப்பட்டது,
நுழைவுச்சீ
ட்டிற்கு
கட்டணம்
இல்லாததால்
இவனுக்கு...

Wednesday, December 22, 2010

பிச்சை


தன்னுடைய
புண்ணியதிற்காக
சில்லறை தந்தவன்
சொல்கிறான்,
பெற்றவனை
பிச்சைக்காரன்
என்று...

பிச்சைக்காரன்


உதவி செய்தவர்களுக்கு
எல்லாம்
புண்ணியத்தை தந்தவன்,
என்ன பாவம்
செய்தானோ ?
இன்னும் இருக்கிறான்
பிச்சைகாரனாக...

மேகம்


நேற்றைய
பயணத்தில்
தலைக்கு மேல்
மேகத்தைக் கண்டதும்
மழை வேண்டி
நின்றேன். 


பாதை மாறி
சென்றது
மேகம்.
எங்கு சென்றால் என்ன ?
பூமி குளிர்ந்தால்
சரியென்று
மீண்டும் துவக்கினேன்
என் பயணத்தை...

Tuesday, December 21, 2010

ஒதுக்கப்பட்டவன்

கொடியேற்றத்துடன்
ஊருக்கு உள்ளே
வேதம் முழங்க
ஆடல் கடவுளுக்கு
அழகாக
தொடங்கியது திருவிழா .

ஊருக்கு வெளியே
ஒதுக்கப்பட்டவர்களுக்காக

ஆயுதம் ஏந்தி
போராடினார்
அதே கடவுள்
அய்யனாராக .

Monday, December 20, 2010

வாழ்க்கை ...

திருப்புமுனைகளுடன்
பயணிக்கும்
ஒரு
வழிப்பாதை.....

காய்த்த மரம்

மற்றவர்கள்
என்னை குறை சொல்லும்போது
மனம் கூறியது,
"காய்த்த மரத்தில்
தான் கல்லடிபடும்"
என்று..

மூளை கூறியது,

"இது மரத்துக்கு தெரிந்தால்
காய்ப்பதையே
நிறுத்திவிடும்"
என்று...

மரத்தை ஓர் அறிவாக

படைத்த
இயற்கைக்கு நன்றி.

சிலுவை


 
 சிறகுகள்
இருந்த
என் தோளில்
சிலுவையை
அறைந்தது
யார் ?

கடல் தாமரை


கடலிலும்
தாமரை பூக்கும்.
என்னவள்,
என் காதலை
ஏற்கும்போது....