Sunday, January 30, 2011

புதையலைத் தேடி ...

உறக்கம்
வராத
இரவுகளில் கூட
உறங்கச்செல்கிறேன்
புதைந்த
 உன் 

நினைவுகளைத் தேடி...

Saturday, January 29, 2011

காந்திய ‘வியாதி’

காந்தியடிகளிடம்
இருந்து
நாங்கள்
அஹிம்சையை 
அதிகமாக 
கற்றுக்கொண்டோம்.

600 பேர் இறந்தும் 
இன்னும்
அமைதியாக 
இருக்கிறோம்.

நாங்கள்
காந்தியவாதிகள்...

Thursday, January 13, 2011

உழவர் தினம்

 
உண்ண
உணவு இல்லாமல்
உழவன்
இருக்கையில் 
நான் மட்டும்
எப்படி
கொண்டாடுவேன் 
உழவர் தினத்தை ?

Tuesday, January 11, 2011

உழவன்

விளை நெல்லுக்கு
விலை பேச 
முடியாதவர்,
எலிக்கறி தின்கிறார்,
இன்று...

தன் பண்டிகையை
நமக்கு
விடுமுறையாக
தந்து விட்டு
ரேஷனில்
கையேந்தி நிற்கிறார். 

அவருக்கும் சேர்த்து
பாடினேன்
"பொங்கலோ பொங்கல்”

உங்களுக்கும்
கூறுகிறேன்
"Happy Pongal" 
என்று...


Wednesday, January 5, 2011

நீயும்.. நானும்...

இலையுதிர்
காலத்தில் 
எல்லாம்
இலை 
உதிர்வதை
ரசித்தேன்..


இன்று
நீ
பிரியும் போது
உணர்கிறேன்,
அந்த
மரத்தின் வலியை...

Tuesday, January 4, 2011

சந்திப்பிழை

சந்திப் பிழைகளை
எழுத
நினைத்த
என்
எழுத்துக்களிலும்
அதே பிழை....