Sunday, February 13, 2011

நான்...

ஊரில்
விவசாயம்
பார்க்காமல்
நகரம் வந்தவன்
நான்..

 என்னை FACEBOOK–ல்
 FARMVILLE
விளையாட அழைக்கிறார்கள்
.

நான்
புதுமையை
விரும்பினேன்.
 

ஆனால்,
நான் புரட்சிக்காரன்
அல்ல.


எனக்கு
புரட்சியும் வேண்டாம்,
ஒரு வெங்காயமும் வேண்டாம்.

 புரட்சி 

ஏழைகளுக்கானது,
வெங்காயம் 

பணக்காரனுக்கானது .

இரண்டாலும்
ஆட்சியை 

வேண்டுமானாலும்
மாற்றலாம்.

 ஆனால்,
இங்கே
மனிதனின்
மாற்றமே
தேவைப்படுகிறது.

அம்மணம் ஆன
ஊரில்
கோவனம்
காயாது.

சுயநலவாதி
என்பாய்..
இருந்து 

விட்டுப்போகிறேன்.

எனக்கு
யாரையும்
இழக்கவும் 

விருப்பம் இல்லை,
எதையும்
அடையவும் 

விருப்பம் இல்லை.

நான்
பொது வாழ்க்கையை
விரும்பவில்லை,
பொதுவான
வாழ்க்கையை
விரும்புகிறேன்,
எல்லோருக்கும்மாக....

Friday, February 11, 2011

வங்க கடல்..

வங்க கடலில்
கங்கை 
மட்டும் அல்ல..

எங்கள் பெண்டிரின்
கண்ணீரும்,
எங்களது இரத்தமும்
கலக்கிறது.

மனிதனின் 
மனம்
கருப்பானதால்

கடலின்
நிறம்
சிவப்பாகிறது.

Thursday, February 10, 2011

DEAD SEA

கடற்கரையில்
கால் நனைக்க
தயங்குகிறேன்.
அலைகள் எல்லாம்
இரத்தம்.

வங்க கடலில்

 அங்கங்கள் மிதக்கின்றன
.

மீன்கள் இறந்ததால்
அங்கே..
மீனவர்கள் இறப்பதினால்
இங்கே..

வெகு அருகில்
மற்றொரு 
"DEAD SEA