விவசாயம்
பார்க்காமல்
நகரம் வந்தவன்
நான்..
என்னை FACEBOOK–ல்
FARMVILLE
விளையாட அழைக்கிறார்கள்.
நான்
புதுமையை
விரும்பினேன்.
ஆனால்,
நான் புரட்சிக்காரன்
அல்ல.
எனக்கு
புரட்சியும் வேண்டாம்,
ஒரு வெங்காயமும் வேண்டாம்.
புரட்சி
ஏழைகளுக்கானது,
வெங்காயம்
பணக்காரனுக்கானது .
இரண்டாலும்
ஆட்சியை
வேண்டுமானாலும்
மாற்றலாம்.
ஆனால்,
இங்கே
மனிதனின்
மாற்றமே
தேவைப்படுகிறது.
அம்மணம் ஆன
ஊரில்
கோவனம்
காயாது.
சுயநலவாதி
என்பாய்..
இருந்து
விட்டுப்போகிறேன்.
எனக்கு
யாரையும்
இழக்கவும்
விருப்பம் இல்லை,
எதையும்
அடையவும்
விருப்பம் இல்லை.
நான்
பொது வாழ்க்கையை
விரும்பவில்லை,
பொதுவான
வாழ்க்கையை
விரும்புகிறேன்,
எல்லோருக்கும்மாக....

